×

ரூ.2 ஆயிரம் லஞ்சம் சத்துணவு பிரிவு உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூர் ஜீவா நகர் சலவை பட்டறை வீதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சுகந்தி. திருப்பூர் 15 வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2014 நவம்பர் மாதம் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். தமிழ்நாடு அரசின் குடும்ப நலநிதி ரூ.1.5 லட்சம் பெறுவதற்காக மாநகராட்சி சத்துணவு பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதை பரிசீலனை செய்வதற்காக சத்துணவு பிரிவு உதவியாளர் சுகுணா (64), முத்துவிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை விசாரித்து, சுகுணாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post ரூ.2 ஆயிரம் லஞ்சம் சத்துணவு பிரிவு உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Pearl ,Tiruppur Jeeva Nagar Laundry Workshop Road ,Sukanti ,Tiruppur 15 Velampalayam Middle School ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே...