×

அரிவாளுடன் சுற்றிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 

சேலம், ஆக.10: சேலம் திருமலைகிரி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் மணிகண்டன்(23). இவர் மீது இரும்பாலை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிறை சென்று ஜாமீனில் வௌியே வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி வள்ளுவர் நகரில் அரிவாளுடன் சுற்றி பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். மேலும், அதேபகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பரது வீட்டை சேதப்படுத்தி, அவரையும் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து லிங்கேஸ்வரன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, இரும்பாலை போலீசார் மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள மணிகண்டனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

The post அரிவாளுடன் சுற்றிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Sidthan ,Tirumalakiri ,Manikandan ,Irmbalai ,Kondalampatty ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...