×

தாறுமாறாக ஓடிய லாரி மோதி விபத்து; தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.2: ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் ஆற்றுபாலத்தில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் இருந்து ஒரு லாரி தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவ்வழியாக வந்த 2 டூவீலர்கள், கார், ஆட்டோ என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியது. இதில், டூவீலரில் வந்த பாஞ்சாலியூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயபிரகாஷ் (24) என்பவர் படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜெயபிரகாசை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று உயிரிழந்தார். இதுபற்றி குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாறுமாறாக ஓடிய லாரி மோதி விபத்து; தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Bengaluru ,Dharmapuri ,Markandeyan ,Guruparapalli, Hosur Krishnagiri National Highway ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி விவசாயி பலி