×

புதுக்கோட்டையில் 30ம்தேதி “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்டத்தில் 30ம்ேததி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம்.

இம்முகாம் 30.7.2024 புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளுர் ஊராட்சி, முள்ளுர் இ-சேவை மையத்தில், முள்ளுர், வாகவாசல், புத்தாம்பூர், செம்பட்டூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சி, வி.ஆர்.பி. திருமண மண்டபத்தில், தாந்தாணி, சிலட்டூர், ராஜேந்திரபுரம், கொங்குடி, நற்பவளக்குடி, பூவத்தக்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொப்பனாப்பட்டி ஊராட்சி, செங்கிடை கருப்பர் மண்டபத்தில், தொட்டியம்பட்டி, பி.உசிலம்பட்டி, கண்டியாநத்தம், வேகுப்பட்டி, பகவாண்டிபட்டி, கோனைப்பட்டி, கொப்பனாப்பட்டி, ஆலவயல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டையில் 30ம்தேதி “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Pudukottai ,Collector ,Aruna ,Chief Minister ,Project ,Pudukottai district ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்