மொடக்குறிச்சி, ஜுலை 27: சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்பு மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கு பொதுக் கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கோபால், செயல் அலுவலர் மகேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் சந்திரதேவி பாபு ராஜா, தனலட்சுமி கார்த்திகேயன், நீலவேணி மோகன்குமார், சவிதா பாலச்சந்தர் ,மருதாச்சலம், சுந்தரமூர்த்தி, சந்திரசேகரன், தனபால் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வேலுமணி நன்றி கூறினார்.
The post சிவகிரி அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா appeared first on Dinakaran.