×

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 100 தூய்மை பணியாளர்கள் பயணம்

 

ஈரோடு,அக்.18: ஈரோட்டில் இருந்து 100 தூய்மை பணியாளர்கள் நேற்று சென்னை புறப்பட்டு சென்றனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில் அங்கு தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்களை அனுப்பி வைக்க மாநகராட்சி ஆணையர் மனிஷ் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நேற்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவேல், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 4 சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 100 தூய்மைப் பணியாளர்கள், 2 பேருந்துகளில் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களுக்குத் தேவையான கையுறைகள்,முகக்கவசம் மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை தனியாக ஒரு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டன.

அவர்கள் சென்ற பேருந்துகளை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மனிஷ், துணை மேயர் செல்வராஜ், 1ம் மண்டலத் தலைவர் பி.கே.பழனிசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 100 தூய்மை பணியாளர்கள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Chennai ,
× RELATED ஈரோடு தீபாவளி பண்டிகை...