×

ஆறுமுகநேரியில் பைக் திருட்டு

ஆறுமுகநேரி, ஜூலை 27: ஆறுமுகநேரி ரயில் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயமானது. திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் மரியாநகரை சேர்ந்தவர் ஞானசேகர் மகன் தனராஜ்(34). இவர் நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனக்கு சொந்தமான பைக்கை ஆறுமுகநேரி ரயில் நிலையத்தின் முன்பு நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை 8.30 மணிக்கு தனது பைக்கை ஆறுமுகநேரி ரயில் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இரவு 8 மணிக்கு வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. இது குறித்து தனராஜ் ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ. செல்லத்துரை வழக்குப்பதிவு செய்தார். எஸ்.ஐ. பிரபாகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆறுமுகநேரியில் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Arumukaneri ,Gnanasekar ,Thanaraj ,Adikalapuram Marianagar ,Tiruchendur ,Nellai ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...