×

பழைய மட்டன் விற்ற கறிக்கடைக்காரருக்கு ரூ.3000 அபராதம்

சிவகங்கை, ஜூலை 26: சிவகங்கை வாரச்சந்தை ரோடு, மஜீத் ரோடு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தினர். இதில் வாரச்சந்தை ரோட்டில் உள்ள ஒரு கடையில் 15 கிலோ பழைய ஆட்டுக்கறி பிரிட்ஜில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கறியை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். அனைத்துக்கடைகளிலும் பழைய இறைச்சியை விற்பனை செய்தால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர். மேலும் பல்வேறு கடைகளில் 8கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.

The post பழைய மட்டன் விற்ற கறிக்கடைக்காரருக்கு ரூ.3000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Food Safety Officer ,Saravanakumar ,Municipal Health ,Sivagangai Warachantha Road ,Majeed Road ,Dinakaran ,
× RELATED வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு