×

சீர்காழி அருகே திருவாலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

சீர்காழி, ஜூலை 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். ஊராட்சி, ஒன்றிய ஆணையர் திருமுருகன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

முகாமில் திருவாலி திருநகரி, கீழசட்டநாதபுரம், புதுத்துறை ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்து பயன் அடைந்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமரைச்செல்வி, திருமாறன், சுந்தரராஜன், துரைராஜன், டெய்சி ராணி, ஊராட்சி செயலாளர்கள் சந்தோஷ், ராஜேஸ்வரி, சங்கர்குமார், உதயகுமார், மற்றும் வேளாண்மை, மின்சாரதுறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

The post சீர்காழி அருகே திருவாலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvali ,Sirkazhi ,Mayiladuthurai District ,Sirkazhi, Tiruvali Panchayat ,Chief Minister's Project Inauguration Ceremony ,Saravanan ,District Development Officer ,Panchayat ,Union Commissioner ,Thirumurugan ,Chief Minister ,Project ,
× RELATED சீர்காழி அருகே திருவாலி ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு