×

சமச்சீர் உரமிடல் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

 

நாகப்பட்டினம்,ஜூலை26: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருமருகலில் விவசாயிகளுக்கு சமச்சீர் உரமிடல் மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல் தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. திருமருகல் வேளாண் உதவி இயக்குனர் புஷ்கலா தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் சாகித்யா முன்னிலை வகித்தார்.

நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஆனந்தராஜ் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,இயற்கை உரங்களின் பயன்பாடுகள் குறித்தும் பேசினார். விவசாயிகளின் வயல்களில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில், வேளாண்மை உதவி அலுவலர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சமச்சீர் உரமிடல் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Tirumarukal ,Department of Agriculture and Farmers Welfare ,Tirumarugal ,Assistant Director ,Agriculture ,Pushkala ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் அவுரித்திடலில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி