×

ராவுத்தபேரியில் புதிய ரேஷன் கடை திறப்பு

கடையம், ஜூலை 26: கடையம் யூனியனுக்கு உட்பட்ட துப்பாக்குடி ஊராட்சி ராவுத்தபேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.16 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடை கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பங்கேற்று ரேஷன் கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் துப்பாக்குடி ஊராட்சி தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அண்ணா போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய செயலாளர் இளங்கோ, அவைத்தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் நூருல்அமீர், ராமசுந்தரம், கருப்பசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ராவுத்தபேரியில் புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Rautaperi ,Grama ,Gunpowder Orati Rautdhari ,Union ,Alankulam ,MLA Manoj ,Rautdaberi ,
× RELATED தமிழ்நாடு கிராம வங்கியின் விஎம்சத்திரம் கிளை இடமாற்றம்