×

சுங்கான்கடையில் பெண் தற்கொலை

திங்கள்சந்தை, ஜூலை 26: சுங்கான்கடை அருகே ஆளுர் புதுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (எ) வேணு (67). விவசாயி. அவரது மனைவி சரஸ்வதி (53). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சரஸ்வதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரஸ்வதி அவ்வப்போது கணவரிடம் வாள்வதற்கு பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வேணு கீழகருப்புகோடு சென்றார். மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மதியம் அங்கிருந்து செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது சரஸ்வதி வீட்டு கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கீழே இறக்கி பார்த்துள்ளனர். ஆனால் சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து வேணு இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து சரஸ்வதி உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுங்கான்கடையில் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ishakiyappan (A) Venu ,Alur Pudutheru ,Sungankadai ,Saraswati ,Nagercoil ,
× RELATED சுங்கான்கடையில் முதியவர் திடீர் மாயம்