×

உடைகள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் தோழி

அன்றாட வாழ்வில் உடைகளின் பராமரிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நம் உடைகளை தூய்மையானதாகவும், விரைவில் கிழிந்து போகாமலும் பராமரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம்…

*ஈரத்துணிகளை காயவைக்க அலுமினியத்தால் ஆன கேங்கர்களையே பயன்படுத்த வேண்டும். மரத்தால் ஆன கேங்கர்கள் துணிகளின் மேல் கரையை ஏற்படுத்திவிடும்.

*உடைகளை உப்பு கலந்த நீரில் நனைத்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது. வண்ண உடைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது.

*துணியில் நீலம் சீராக பற்ற உப்பு கலந்த பிறகு துணியை அதில் நனைக்கவும். சோப்புக் கட்டியை நன்கு சீவி அதனை சோப்புத் தூளுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.

*புடவைகளில் எண்ணெய் கறை படிந்துள்ள இடத்தில் டால்கம் பவுடரை பூசி மடித்து ஒரு வாரம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு பவுடரை தட்டி விடலாம். எண்ணெய் கறை நீங்கிவிடும்.

*வியர்வை துணிகளை உடனுக்குடன் துவைத்து குளிர்ந்த நீரில் நனைத்து விட்டால் மஞ்சள் கறை ஏற்படாது.

*உல்லன் துணிகளை வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பு பவுடரைக் கரைத்து மூன்று நிமிடம் ஊற வைத்து பிறகு கசக்காமல், எந்த இடத்தையும் தேய்க்காமலும் பிழியாமலும், அப்படியே தொங்கவிட்டு தண்ணீர் வடிந்து தானாகவே காயும்படி விட்டு விட வேண்டும்.

*அடர்நிற உடைகளை கஞ்சி ேபாடும் போது உடைகளை திரும்பி உட்பக்கம் வெளியே வருமாறு போட்டால் வெளிப்புறத்தில் கஞ்சி வெள்ளையாக தெரியாது.

*உடைகளின் உட்புறத்தில் ஒரு பகுதியை மட்டும் நனைத்து அதன் மேல் ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியை வைத்து தேய்த்துப் பார்த்தால் உடை சாயம் போகுமா? இல்லையா என்பது தெரிந்துவிடும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

The post உடைகள் பராமரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED தொழிலதிபரான பள்ளி மாணவி!