×

போக்சோவில் தொழிலாளி கைது

 

மணப்பாறை, ஜூலை 25: மணப்பாறை அருகே போக்சோ வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் பெருமாள் (42). கூலி வேலை செய்து வருகிறார். இவர் 13 வயது மற்றும் 16 வயது உடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் பெருமாள் அந்த இரண்டு சிறுமிகளின் தாயை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் . இரண்டு சிறுமிகளும் வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்று அவர்களை பரிசோதித்த போது, பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரியவந்தது.இதனை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து பெருமாளை திருச்சி மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post போக்சோவில் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : POCSO ,Manaparai ,Karuppan ,Perumal ,Marungapuri ,Trichy district ,Coolie ,Boxoville ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த...