×

தோவாளை முருகன் கோயிலில் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை

சுசீந்திரம்,ஜூலை 25: தோவாளை முருகன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கோயிலுக்கு செல்லும் மேல்பகுதியில் உள்ள ஒரு பாதை முட்புதர்கள், குப்பை சூழ்ந்து இருப்பதாக பக்தர்களின் புகாரின் அடிப்படையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுபோல் பாதைகளில் மின் விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தரி, மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் சேர்மராஜா, திருமலை முருகன் பக்தர்கள் சங்க தலைவர் ராமன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தோவாளை முருகன் கோயிலில் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thovalai Murugan Temple ,Suchindram ,Aadi ,Kumari ,
× RELATED சுசீந்திரம் அருகே கார் மோதி காவலாளி பலி