×

கல்லூரி மாணவர் தற்கொலை

சோழவந்தான், ஜூலை 24: சோழவந்தான் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அருளப்பன் மகன் செபஸ்டியன் சந்தோஷ்(20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சில நாட்களாக கல்லூரிக்கு போகாமல் செபஸ்டியன் சந்தோஷ் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு செபஸ்டியன் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Arulappan ,Sebastian Santosh ,Karatupatti ,Madurai Private College ,
× RELATED சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரிக்கை