×

கொடைக்கானலில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து: போக்குவரத்து பாதிப்பு

 

கொடைக்கானல், ஜூலை 22: கொடைக்கானலில் சாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் நகரின் பிரதான பகுதியாக மூஞ்சிக்கல் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு, பழநி செல்வதற்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சந்திப்பாகவும் இந்த மூஞ்சிக்கல் பகுதி உள்ளது.

இந்நிலையில் நேற்று நண்பகல் வேளையில் வத்தலகுண்டு – கிளாவரை செல்லக்கூடிய அரசு பேருந்து பழுதாகி சாலையின் நடுவே நின்றது. வாகனத்தில் கியரும் வேலை செய்யாததால் பேருந்தை வேறு பகுதிக்கு நகர்த்த முடியவில்லை. இதனால் இந்த சாலையில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள், மற்றும் பேருந்து நடத்துனர் உள்ளிட்டோர் பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post கொடைக்கானலில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Munchikal ,Watalakundu ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடியில்...