×

மேலகிருஷ்ணன்புதூர் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

 

சுசீந்திரம், ஜூலை 22 : சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ் தலைமையிலான போலீசார் மேலகிருஷ்ணன்புதூர் அருகே ஆத்திக்காட்டுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

உடனே அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். கிடுக்கிப்பிடியாக நடந்த விசாரணையில் அவர் ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளை பகுதியை சேர்ந்த கபின் (24) என்பது தெரிவந்தது. கபின் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அதில் 50 கிராம் கஞ்சா போதைப் பொருள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேலகிருஷ்ணன்புதூர் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Melakrishnanbutur ,Suchindram ,Susindram Police ,Sub-Inspector ,Sopanaraj ,Athikattuvilai ,Melakrishnanputur ,
× RELATED சுசீந்திரம் அருகே கார் மோதி காவலாளி பலி