×

நாகர்கோவிலில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் வாலிபர், தாயார் மீது வழக்கு

 

நாகர்கோவில், ஜூலை 22: நாகர்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (20). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று, அருகில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண் ஒருவர் குளிப்பதை ரகசியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த இளம் பெண்,  ரஞ்சித்தை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ரஞ்சித் மற்றும் அவரது தாயார் சேர்ந்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினர்.

இரும்பு கம்பியை காண்பித்தும் மிரட்டினர். இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதையடுத்து ரஞ்சித் அங்கிருந்து தப்பி விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மற்றும் அவரது தாயார் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் இளம்பெண் மீது சரமாரி தாக்குதல் வாலிபர், தாயார் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Ranjith ,Arugulai ,
× RELATED பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது குவியும்...