×

மனைவியை தாக்கிய கணவர் கைது

 

விருதுநகர், ஜூலை 21: விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் வசிப்பவர் ஜோதிலட்சுமி (39). இவரது கணவர் அழகர்சாமி (40).அழகர்சாமி சின்னமூப்பன்பட்டியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில், அழகர்சாமி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு, குடும்ப செலவிற்கு பணமும் தருவதில்லை, வீட்டிற்கும் வருவதில்லை. நேற்று முன்தினம் ஜோதிலட்சுமி, தனது இளைய மகளுடன் கணவனின் ஒர்க்ஷாப்பிற்கு சென்று அழகர்சாமியை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார். அழகர்சாமி மனைவியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, திருப்புலியால் கையில் குத்தி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஜோதிலட்சுமி மேற்கு போலீசில் அளித்த புகாரில் அழகர்சாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jotilakshmi ,Bullalakoti Road ,Akadarsami ,Alaakarsami ,Sinnamuppanpatti ,
× RELATED விருதுநகரில் காவல்துறையினர் கையில்...