×

கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

நாகர்கோவில், ஜூலை 21: நாகர்கோவில் மாநகராட்சி 42வது வார்டுக்கு உட்பட்ட வேதநகர் மாதா தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார். இதில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ், சுகாதார அலுவலர் பாண்டியராஜன், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அந்த பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

The post கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Mayor ,Mahesh ,Vedanagar Mata Street ,42nd Ward ,Nagercoil Corporation ,Prabha Ramakrishnan ,Councilor ,Stalin Prakash ,
× RELATED நாகர்கோவிலில் புதிய ரேஷன்கடை கட்டிடம் மேயர் மகேஷ் திறந்து வைத்தார்