×

அனுப்பன்குளம் ஊராட்சியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு

 

சிவகாசி, ஜூலை 20: சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2 புதிய அங்கன்வாடி மையங்களை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார். சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டிலும் பேராபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டிலும் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்களை பள்ளி குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மேற்பார்வையாளர் முத்துமாரி, ஊராட்சி செயலர் சத்யாதேவி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அனுப்பன்குளம் ஊராட்சியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi Centers ,Paddankulam Panchayat ,Sivakasi ,Panchayat ,President ,Paddankulam ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது