×

கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி பலி

வீரவநல்லூர், ஜூலை 20: வீரவநல்லூர் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் நயினார் மகன் பூதத்தான் (32). தச்சு தொழிலாளி. இவர், நேற்று காலை 8 மணியளவில் இப்பகுதியில் உள்ள கன்னடியன் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்படவே, கால்வாயில் தவறி விழுந்த பூதத்தான் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூதத்தான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Veeravanallur ,Nayanar Makan Bhoothathan ,Veeravanallur RC North Street ,Kannada canal ,Dinakaran ,
× RELATED வீரவநல்லூரில் திக சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு