×

அரியலூரில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்

 

அரியலூர், ஜூலை 6: அரியலூரில் நேற்று நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், வரும் சட்ட மன்ற தேர்தலுக்குள் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு கட்சியினர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய செயலர் கிறிஸ்டோபர் திலக், மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலர் செல்வம், தமிழ்செல்வன், ஜெயங்கொண்டம் முன்னாள் நகர தலைவர் ஜாக்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அரியலூர் நகர தலைவர் சிவகுமார் வரவேற்றார்.

The post அரியலூரில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Ariyalur ,Tamil Nadu ,Congress ,president ,Selvaperunthagai ,MLA ,
× RELATED போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்..!!