×

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே மாநிலத்தில் அதிகம் பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேர்ச்சி, கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட விவகாரங்கள் நீட் தேர்வு முறைகேடு குறித்த பிரச்னைகளை பூதாகரமாக்கி உள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் எழுந்த முதல் குரல், நாடுமுழுவதும் வலுப்பெற்று வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீட் முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,NEET ,K. C. Venugopal ,Delhi ,K. ,C. Venugopal ,K. C. ,Venugopal ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள்...