×

பைக் விபத்தில் வாலிபர் சாவு

தூத்துக்குடி, ஜூன் 15: தூத்துக்குடி அருகே உமரிக்கோட்டை, வரதராஜபுரம் வடக்கு தெருவைச்சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ்(23). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் 7ம் தேதி மேலதட்டப்பாறையில் இருந்து உமரிக்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து விக்னேஷின் தந்தை முருகன் அளித்த புகாரின்பேரில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post பைக் விபத்தில் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Murugan ,Vignesh ,Umarikottai, Varadarajapuram North Street ,S. Valvavu ,Melathatparai ,Umarikottai ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...