×

களக்காடு அருகே கோஷ்டி மோதல்

களக்காடு, ஜூன் 14: வடுகச்சிமதிலை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும், உறவினரான செல்லத்துரைக்கும் (56) சொத்து பிரச்னைஉள்ளது. நேற்று முன்தினம் கணேசன் வயலின் கால்வாய் அருகே செல்லத்துரையின் தூண்டுதலின் பேரில் தயாளன் மகன் பாலசுப்பிரமணியன் (30), கோதைசேரியை சேர்ந்த தளவாய்பாண்டி மகன்கள் கண்ணன் (29), விவேக் (27) ஆகியோர் வாழைக்கன்றுகள் நட்டுள்ளனர். இதை கணேசனின் மனைவி முத்துசெல்வி (47) கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன், கண்ணன், விவேக் ஆகியோர் முத்துசெல்வியை தாக்கி உள்ளனர்.இதுபோன்று கணேசனும், முத்துசெல்வியும் கண்ணணை தாக்கினர். காயமடைந்த முத்துசெல்வி, கண்ணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பினரின் புகாரின்பேரில் திருக்குறுங்குடி போலீசார் செல்லத்துரை, பாலசுப்பிரமணியன், கண்ணன், விவேக், கணேசன், முத்துசெல்வி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post களக்காடு அருகே கோஷ்டி மோதல் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Ganesan ,Vadugachimatil ,Chellathurai ,Dayalan ,Balasubramanian ,Thalavaipandi ,Kannan ,Kothaisery ,Kalakkadu ,
× RELATED தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு