×

6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம்

சென்னை: 6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை செயலாளருக்கு தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சில நாளிதழ்களில் குவைத்தில் கைதான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிச.5ம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த பிப்.9ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்ய உரிய தூதரக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிய அரசின் வெளியுறவு துறை செயலாளருக்கு இன்று (நேற்று) மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளார்.

The post 6 மாதங்களாக குவைத் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kuwaiti ,Chief Secretary ,Shivdas Meena ,Union External Affairs ,CHENNAI ,Sivdas Meena ,Secretary of External Affairs ,Tamil Nadu government ,Nadu ,Union ,Foreign Secretary ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...