×

அரியலூரில் இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீர்

 

அரியலூர், மே 21:அரியலூர் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை நேற்று பெய்தது. இரவு பெய்த மழையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

நேற்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு வரை பெய்த மழையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடிக்கால் வசதிகள் இல்லாததால் மழை நீர் தேங்கியுள்ளது. அரியலூர் புதுமார்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திசந்தை, வெள்ளாளத்தெரு, பெரம்பலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்பலூர் தஞ்சாவூர் சாலையில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன.

The post அரியலூரில் இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தேங்கிய நீர் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும்...