×

காலிஸ்தான் தீவிரவாதி கொலை; கனடாவில் 4வது இந்தியர் கைது

வாஷிங்டன்: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 4வது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டை சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45). கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு உள்ள சீக்கிய குருத்வாரா அருகே ஹர்தீப் சிங் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையினால் இந்தியா- கனடா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரண் பிரார்(23), கமல் பிரீத் சிங்(22), கரன் பிரீத் சிங்(28) ஆகிய 3 வாலிபர்களை கனடா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஹர்தீப் சிங் கொலையில் தொடர்புடைய பிராம்ப்டன் சர்ரேயை சேர்ந்த அமன்தீப் சிங்(22) என்பவரை கனடா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கனடா போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹர்தீப் சிங்கை துப்பாக்கியால் சுட்ட 2 பேரில் ஒருவர் அமன்தீப் சிங். கைதான 4 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

The post காலிஸ்தான் தீவிரவாதி கொலை; கனடாவில் 4வது இந்தியர் கைது appeared first on Dinakaran.

Tags : Callistan ,Canada ,Washington ,Hardeep Singh Nijjar ,Hardeep ,Sikh Gurdwara ,Dinakaran ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி