×

ஆழ்வார்குறிச்சி காக்கும்பெருமாள் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

கடையம், மே 8: ஆழ்வார்குறிச்சியில் ராமநதி ஆற்றின் கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற காக்கும்பெருமாள் சாஸ்தா சுடலைமாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கொடைவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொடை விழா நாளான நேற்று காலை 5 மணிக்கு மேல் சிவனைந்த பெருமாள் பூஜையும், 8 மணியளவில் பால் குடம் ஊர்வலமும், பகல் 12 மணிக்கு பட்டாணி பாறையில் இருந்து பழம் எறிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதிய கொடை விழாவும் அன்னதானமும் நடந்தது. மாலை 4.30 மணிக்கு மேல் மஹாஅபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. நள்ளிரவு 12.30 மணிக்கு சாமக்கொடை விழா, ஊட்டுகளம், அர்த்தசாம பூஜையும் நடந்தது. இன்று காலை 10 மணிக்கு மேல் சின்னநம்பி பூஜை நடக்கிறது.

The post ஆழ்வார்குறிச்சி காக்கும்பெருமாள் சாஸ்தா, சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா appeared first on Dinakaran.

Tags : Alwarkurichi Kakumperumal Shasta, Sudalimadaswamy Temple Consecration Ceremony ,Ramanadi river ,Alwarkurichi ,Sastha Sudalimadasamy ,Chitrai ,Kodai Festival ,Alwarkurichi Kakumperumal Shasta ,Sudalimadaswamy ,Temple Kodaivizham ,
× RELATED பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்டவர் கைது