×

ஜெயங்கொண்டம் அருகே தகராறு: இருதரப்பினர் 5 பேர் கைது

ஜெயங்கொண்டம், மே7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமம் விருத்தாச்சலம் ரோடு கந்தசாமி மகன் குணசேகரன் (58)என்பவர் கல்லாத்தூர் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு கடைக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது கல்லாத்தூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ராஜ்குமார் (48) என்பவர் குணசேகரனை திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகராறு காரணமாக ஆத்திரமடைந்த குணசேகரன் தரப்பினர் கல்லாத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரை காரில் கடத்தி வந்து கீழக்குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதில் கீழக்குடியிருப்பு குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கல்லாத்தூரை சேர்ந்த ராஜ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கல்லாத்தூர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீழக்குடியிருப்பைச் சேர்ந்த குணசேகரன் (59 ) அவரது மகன் பழனிச்சாமி (36) மேலூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜராஜன் (22) உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே தகராறு: இருதரப்பினர் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Gunasekaran ,Kandasamy ,Kandaswamy, Vrudhachalam Road ,Jayangkondam, Ariyalur District ,Kalathur Kamatshyamman ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில்...