×

பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்கப்படுமா?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவத்தில் போலீஸ் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு எப்போது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு, போலீஸ் துன்புறுத்தலில் மரணமடைந்தார். கணவரை மீட்டுத் தரக்கோரி ராஜகண்ணு மனைவி பார்வதி தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 10 ஆண்டு சிறை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி, உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

The post பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்கப்படுமா?: அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Government of Tamil Nadu ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...