×

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்க தடை விதிக்கும் 2013-ம் ஆண்டு சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...