×

திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் தேவஸ்தான சந்தன தோட்டம் எரிந்து கருகியது

திருமலை : திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் தேவஸ்தான சந்தன தோட்டம் எரிந்து கருகியது. திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் பாபவிநாசம் செல்லும் சாலையில் பார்வேட்டை மண்டபம் எதிரே சந்தன மர தோட்டம் பல ஏக்டர் பரப்பளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடப்பா செல்லும் சாலையில் உள்ள குக்கலதொட்டி என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ சிறுது சிறுதாக பரவி திருமலை சேஷாச்சல மலை தொடரிலும் பரவியது.

இந்த தீயின் காரணமாக தேவஸ்தானத்தில் சந்தன மர தோட்டத்திற்குள் தீ மளமள வென பரவத் தொடங்கியது. உடனடியாக தேவஸ்தான வனத்துறை மற்றும் மாநில வனத்துறை அதிகாரிகள் இணைந்து இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் 2 தண்ணீர் டேங்கர் லாரியை வரவழைத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் பல ஏக்கர் பரப்பளவில் சந்தனமரச் செடிகள் எரிந்து கருகியது. இருப்பினும் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் தேவஸ்தான சந்தன தோட்டம் எரிந்து கருகியது appeared first on Dinakaran.

Tags : Goddess Sandana Garden ,Tirumala ,Thirumalai ,Barvetta Hall ,Babavinasam ,Tirupathi Eumalayan Temple ,Goddess Sandana Orchard ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ