×

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

நாமக்கல், ஏப்.17: நாமக்கல் அருகே திப்பக்காபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் (52). விவசாயி. இவர் கடந்த 14ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நாகப்பனின் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், தீயணைப்புத்துறைக்கு தெரிவித்து அவர்களின் உதவியுடன் நாகப்பனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகப்பன் கால்தவறி கிணற்றில் விழுந்ததில் உயிரிழந்தது தெரிய வந்தது.

The post கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Nagappan ,Thippakkapatti ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...