×

மாத்தூரில் பெற்றோர் கண் எதிரே பரளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

* சுற்றுலா வந்தபோது பரிதாபம்

குலசேகரம் : மயிலாடுதுறை பொன்னி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவாதிராஜன்(57). தனியார் பள்ளி முதல்வர். இவருக்கு 2 மகன், 2 மகள்கள் உண்டு. ஒரு மகன் பிரதீஷ்வர்(24). பிடெக் பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தேவாதிராஜன், மனைவி மற்றும் மகன் பிரதிஷ்வருடன் சுற்றுலாவாக குமரி மாவட்டம் வந்தனர்.

நேற்று முன்தினம் ரயிலில் நாகர்கோவில் வந்த அவர்கள் இரவு அங்கு தங்கிவிட்டு நேற்று காலை பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி போன்ற பகுதிகளுக்கு சென்றுவிட்டு மாலையில் மாத்தூர் ெதாட்டிப்பாலம் சென்றனர்.தொட்டிப்பாலத்தின் கீழே பாறைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் பரளியாற்றை பார்த்த அவர்கள் குளிக்க ஆசைப்பட்டனர். பாறைகளுக்கு இடையே பாயும் தணணீரில் இறங்கி குளித்தனர். அப்போது பிரதீஷ்வர் பாறையில் படிந்துள்ள பாசியில் கால் இடறி தண்ணீரில் விழுந்து மூழ்கினார்.

இதை பார்த்த அவரது பெற்றோர் கூச்சலிட்டனர். பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்டு உடனடியாக குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீஷ்வர் இறந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோர் கண்முன் வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

The post மாத்தூரில் பெற்றோர் கண் எதிரே பரளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Parali River ,Mathur ,Kulasekaram ,Devathirajan ,Mayiladuthurai Ponni Nagar ,Pratishwar ,Chennai ,Paraliya river ,
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...