×

குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை: மாநில அளவிலும் முதலிடம் பிடித்தனர்

சென்னை: குரூப் 1 தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி துணை கலெக்டர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக மேம்பாட்டு உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட குரூப் 1 பதவியில் 95 காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வை 1.9 லட்சம் பேர் எழுதினர். இதில் 2,162 பேர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வில் 198 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னையில் நடந்தது. இறுதி தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் வைஷ்ணவி சங்கர் கூறியதாவது: குரூப் 1 தேர்வில் 95க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் மையங்களில் பயிற்சி பெற்ற 45 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 47 சதவீதம் ஆகும். இந்த தேர்வில் மாருதிப்பிரியா என்ற மாணவி மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துதுள்ளார். காந்திரியா, தினு அரவிந்த் ஆகியோர் 2வது, 4வது இடத்தை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் எங்கள் அகாடமியில் படித்த 36 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி பா.லாவண்யா சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி மாணவி ஆவார். இந்த வருட தேர்வில் முதல் 10 இடங்களில் 6 இடங்களில் எங்கள் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு 7667766266 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

The post குரூப்1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை: மாநில அளவிலும் முதலிடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Shankar IAS Academy ,Chennai ,TNPSC ,DSP ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்