×

கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா விமர்சித்த நிலையில், தற்போது காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதற்கு, ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம் கூறியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேற்றுமுன்தினம் நேரில் அழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து அமெரிக்கா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கருத்து தெரிவித்த அமெரிக்கா, தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘ஒவ்வொரு பிரச்னைக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான சட்ட நடைமுறைகளை அமெரிக்கா ஊக்குவிக்கும். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அறிவோம். இதுபோன்ற சிக்கலான விசயங்களில் தூதரக ரீதியாக கருத்துகளை கூறவில்லை. நாங்கள் எதிர்க்கிறோம் என்று எண்ண வேண்டாம்’ என்றார்.

* ‘அமெரிக்கா கருத்து தேவையற்றவை’
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கைது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் அவசியமற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தொடர்பாக இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியிடம் தெரிவித்தது.

வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் அவசியமற்றவை. எங்கள் தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான எந்தவொரு வெளிப்புற குற்றச்சாட்டும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியா தனது சுதந்திரமான மற்றும் வலுவான ஜனநாயக நிறுவனங்களுக்காக பெருமிதம் கொள்கிறது. எந்தவொரு தேவையற்ற வெளிப்புற தாக்கங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று கூறினார்.

 

The post கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து appeared first on Dinakaran.

Tags : America ,Congress ,Kejriwal ,New Delhi ,Union Ministry of External Affairs ,US ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...