×

பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா

பெரம்பலூர்,மார்ச்28: பெரம்பலூர் நகராட்சியில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதன கோபால சுவாமி கோயிலில், பங்குனி உத் திர பெருந்திருவிழாவின் 12ம் நாளான நேற்று (27ம்தேதி) காலை 10 மணி யளவில் மட்டை அடி விழா வும்,இரவு 8:30 மணியள வில், பெருமாள் மற்றும் தாயார் ஊஞ்சல் சேவை யில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவில் தவில் வித்வான் நடராஜன் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகள் நடைபெற்றது. விழாவில் முன் னாள் அரசுப் பள்ளி வாய்ப் பாட்டு ஆசிரியர் சந்திரோ தயம், கனகசபாபதி, முன் னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், சரவணன், குமார், செந்தில் மற்றும் பெரம்பலூர், துறை மங்க லம், அரணாரை, எளம்ப லூர் விளாமுத்தூர், நொச்சி யம், நெடுவாசல், சிறுவாச் சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திர ளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு தக்கார் லட்சுமணன், செயல்அலுவ லர் கோவிந்தராஜன் ஆகி யோர் செய்திருந்தனர்.

The post பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,RELIGIOUS ,GOPALA SWAMI TEMPLE BANGUNI UTRA FESTIVAL ,MARAGADAVALLIT ,SAMEDA MEDANA ,GOPALA SWAMI TEMPLE ,PERAMBALUR MUNICIPALITY ,PANKUNI UD-THIRA PERUNDA FESTIVAL ,MANYALA WILL ,Perambalur Religious Gopala Swami Temple Panguni Uttra Peruvija ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி