×

கள் விற்றவர் கைது

ஈரோடு, மார்ச் 27: சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நம்பியூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூணாம்பள்ளி, முத்தன் தோட்டம், பருத்திக்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அருகில் உள்ள சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த அங்கப்பன் (36) என்பதும், சட்ட விரோதமாக பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 2 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.

The post கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Nambiur ,Moonampally ,Muthan Estate ,Paruthikkadu ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...