×

ஈரோட்டில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

 

ஈரோடு, மார்ச் 25: ஈரோடு மரப்பாலம் பகுதியில் தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர செயலாளர் சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கமலநாதன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், சிஎஸ்ஐ ஈரோடு திருப்பூர் மண்டல கவுரவ செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், கோயில்கள் நலச்சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் விக்ரம், திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் வீரமணி, திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், தமுமுக மாவட்ட தலைவர் சித்திக், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ஆரிப், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Erode ,Marapalam ,Liberation Tigers of India ,Ramzan ,Liberation ,Leopards… ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....