×

அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

அரியலூர், மார்ச்24: அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார், பின்னர் நாடாளுமன்றப் பொது தேர்தல் குறித்து திமுக வழக்கறிஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக மாவட்ட திமுக அலுவலகம் முன் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் உருவச் சிலைக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மாநில சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சந்திர சேகர், மாவட்ட திமுக துணை செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகர், கணேசன், மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், கென்னடி , அன்பழகன், அசோக சக்கரவர்த்தி, ரெங்க முருகன், நகர திமுக செயலாளர்கள் முருகேசன், கருணாநிதி, மாவட்ட திமுக வழக்கறிஞர்அணி அமைப்பாளர் ராஜசேகர், திமுக அரசு வழக்கறிஞர்கள் கதிரவன், சின்ன தம்பி, இராஜா, அன்பழகன், விஜயக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Dimuka Election Office ,Ariyalur ,Opening Ceremony ,District Dimuka Office Complex ,Chidambaram Parliamentary General Election ,Ariyalur District Dimuka ,District Secretary ,Minister ,Chap. C. Sivashankar ,Dimuka ,Election Office Opening Ceremony ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...