×

கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடி

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஜிஎஸ்டியாக 12.5 சதவீதம் உயர்ந்து ரூ.1.68 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. ஒன்றிய பாஜ அரசு வரி வசூலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ஜிஎஸ்டி அமலானதற்கு பிறகு மாநிலங்களுக்கு வரி வருவாய் வெகுவாகக் குறைந்து விட்டது. எனினும், மாநில அரசின் வரிப் பங்களிப்பை தாமதம் செய்வதாக மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரத்தை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.68 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 12.5 சதவீத உயர்வாகும். நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்தம் ரூ.18.4 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 11.7 சதவீத வளர்ச்சியாகும்.

The post கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Union BJP government ,Dinakaran ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...