சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மிக்ஜாம் புயல் கரையைக் கடந்த பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, வடக்கு திசையில் இருந்து அரபிக் கடலுக்கு நுழையும் குளிர்க்காற்று, தென் மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு வந்து கிழக்கு நோக்கி திரும்பியதால் அங்கு காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக அழகரை எஸ்டேட், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன், சாத்தான்குளம், தூத்துக்குடி 60மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் , அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
The post தென் கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.
