×

சென்னையில் வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பெருமழை மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள். அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செயல்படும் 46 பகுதி அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post சென்னையில் வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamilnadu govt ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...