×

தேசத்தின் நலனுக்காக மோடி எடுக்கும் முடிவுகள் ஆச்சர்யப்பட வைத்தன: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு

மாஸ்கோ: தேசத்தின்நலனுக்காக மோடி எடுக்கும் முடிவுகள் பல முறை என்னை ஆச்சர்யப்பட வைத்துள்ளன என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றில் ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் பிரதமர் மோடியின் கொள்கைதான்.

இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக, தேச நலனுக்காக பிரதமர் மோடி எடுக்கும் பல கடினமான முடிவுகள் என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி அல்லது மிரட்டி பிரதமர் மோடியை எடுக்க வைக்க ஒரு போதும் முடியாது. இதுபோன்ற நெருக்கடி அவருக்கு நிச்சயம் இருக்கும் என்றார்.

The post தேசத்தின் நலனுக்காக மோடி எடுக்கும் முடிவுகள் ஆச்சர்யப்பட வைத்தன: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,President ,Putin ,Moscow ,
× RELATED இருநாட்டு உறவுகள் குறித்து அதிபர்...