சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வர்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதாவது திங்கள் கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.47,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு 35 ரூபாய்குறைந்து ரூ. 5,815-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வர்கிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 05 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.80.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,560க்கு விற்பனை appeared first on Dinakaran.
