×

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ரூ.395.76 லட்சம் ஒதுக்கீடு!!

சென்னை : தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ரூ.395.76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23ல் அங்கன்வாடி மையங்களை சக்ஷம் அங்கன்வாடிகளாக தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் தெரிவித்துள்ளார். 28 மாநிலங்களில் 41,192 அங்கன்வாடி மையங்களை சக்ஷம் அங்கன்வாடிகளாக தரம் உயர்த்த ரூ.21,273 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ரூ.395.76 லட்சம் ஒதுக்கீடு!! appeared first on Dinakaran.

Tags : Anganwadi Centers ,Tamil Nadu ,Chennai ,Saksham Anganwadi Centers ,Anganwadi ,Dinakaran ,
× RELATED அனுப்பன்குளம் ஊராட்சியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு