×

“கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை”

சென்னை: கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; ஆவின் பால் மற்றும் தனியார் பால் விற்பனையில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி விற்பனையாளர்கள் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post “கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை” appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED மதுரையில் விரைவில் 2 லட்சம் லிட்டர்...